தாய் ஒருவர் கிணற்றில் குதித்ததில் பிள்ளைகள் மூவரும் உயிரிழப்பு.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தாயார் ஒருவர் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த சம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில் நேற்று 03.03.2021 மாலை இடம்பெற்றது.

கிணற்றுக்குள் குதித்த தாயார் கிணற்றின் படிக்கற்களை பிடித்ததினால் உயிர் தப்பிக்கொண்டார் ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்திசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

வடக்கில் தற்போது சிறுவர்கள் சித்திரவதைகளும், கொலைகளும், பாலியல் சுரண்டகளும் மேலோங்கி செல்கின்றது.

ஒன்றரை வயதுடைய கிருபாகரன் டேனேஸ், ஐந்து வயதுடைய கிருபாகரன் அக்சயா, எட்டு வயதுடைய கிருபாகரன் கிருத்திகா என்ற சிறார்களே பலியாகியுள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2, 5, 8 வயதுடைய 3 பிள்ளைகளை கட்டி அணைத்துக்கொண்டு தாய் ஒருவர் கிணற்றில் குதித்ததில் பிள்ளைகள் மூவரும் உயிரிழப்பு, தாய் உயிருடன் மீட்பு.

தற்கொலைக்கு முயன்ற
தாய் எழுதியதாக குறிப்பிடப்படும்
கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அதில் குடியும் அடியும் காரணமாக
தன்னால் வாழ முடியாதுள்ளது.
இன்று எனது பிறந்தநாள். நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இந்த குடிகாரனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.