கூட்டமைப்புடன் இனிவரும் காலங்களில் இணைந்து செயற்படமாட்டாது முன்னணி.

அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை
சிவில் சமூகத்தினர் கைவிட வேண்டும் என்று கஜேந்திரகுமார் வலியுறுத்து

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் இணைந்து செயற்படாது.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின்போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும்கூட தற்போதைய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்கு எதிரான பிரேரணை வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆதரித்து கையொப்பமிட்டு அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

இது தமிழ் மக்கள் மீது மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதுகில் குத்திய ஒரு செயற்பாடாகும். எனவே, இவ்வாறான தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இணைப்பதாக இனி எந்தச் சிவில் சமூகத்தினரோ அல்லது மதகுருமாரோ முன்வர வேண்டாம். அவ்வாறான முயற்சிகளை அவர்கள் கைவிட வேண்டும். அத்தோடு நாமும் நாடாளுமன்றத்திளும் அல்லது வேறு செயற்பாடுகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்றிலிருந்து சேர்ந்து பயணிக்கமாட்டோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.