500 ஐத் தாண்டியது கொரோனாச் சாவு!

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

ஆண்கள் நால்வரும், பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவரும், நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான ஆண் ஒருவரும், பரவர்தனஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவரும், மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான பெண் ஒருவரும், கன்னத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவருமே இறுதியாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கொரோனாத் தொற்றால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.