முதலில் சட்டப் பிரச்சினைக்குத் தீர்வு; அதன்பின்பே மாகாண சபைத் தேர்தல் – ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு

“தேர்தல் முறைமை தொடர்பில் தற்போது நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் ஜி புஞ்சிஹேவா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.