பொலிஸ் அதிகாரியின் உடலத்தை ஏற்க மறுத்த மனைவி.

கொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் புதைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் படல்கும்புர பொது மயானத்தில் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.

படல்கும்புர புத்தல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான உப காவல்துறை பரிசோதகரான ஏ.எம்.பிரேமசிறி தற்கொலை செய்திருந்தார்.

குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான திலினி யஷோதா என்ற திருமணமாகாத பெண்ணை ஒருவருடன் தொடர்பில் இருந்த நிலையில் அவரை குறித்த காவல்துறை பரிசோதகர் கொலை செய்துள்ளார்.சடலத்தை பொறுப்பேற்ற குடும்பத்தினர் அதனை வீட்டினுள் வைக்காமல் வெளியே அரை மணி நேரம் வைத்து விட்டு இறுதி அஞ்சலி செலுத்தாமல் மத வழிப்பாடுகளின்றி சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் எவ்வித காவல்துறை அதிகாரியும் கலந்துக் கொள்ளவில்லை. உயிரிழவந்தவரின் மனைவி மற்றும் 3 பிள்ளைகள் முகத்தை ஊடகங்களுக்கு காட்டமல் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளனர்.

பின்னர் பொலிஸ் அதிகாரியின் உறவினர்கள் சிலர் சடலத்தை கல்லறைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.