முகாமைத்துவ பணிகளில் மகளிர்´ என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்ணின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை

இலங்கையில் புகழ்பெற்ற பெண்களின் நற்பெயருக்கு சமூக ஊடகத்தினூடாக ஏற்படுத்தப்படும் களங்கம் காரணாமாக, அழுத்தம் மற்றும் பிரச்சினைகளில் சிக்கியுள்ள பெண்களுக்கு, அரசாங்கம் என்ற வகையில் நாம் உடனடி தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் இலங்கைப் பெண்களின் ஈடுபாடுகள் தொடர்பாக நினைவுகூர்ந்த அவர், வெளிநாட்டு வேலைவாய்பின் ஊடாக அவர்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு வழங்கிவருவவதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்த பெண்களின் பங்களிப்பு பொருளாதாரத்தை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்துகிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கல்வி நிறுவனத்தில் நேற்று (7) இலங்கையின் பெண் தொழில் நுட்ப வல்லுநர்களின் உன்னத சேவையை கௌரவிக்கும் வகையில் ´ஹீரோ´ குழுமத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

தேசிய லொத்தர் சபையின் ஆதரவுடன் ‘முகாமைத்துவ பணிகளில் மகளிர்´ என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பாராட்டு விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த சிரேஷ்ட பெண் கல்வியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இலங்கையின் பெண் வீராங்கனைகளை பாராட்டும் வகையில் ´அபிமன் லியா´ என்ற பாடல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்த தனித்துவமான பாடலை இயற்றிய இரு இளைஞர்களுக்கும் பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

போர் வீரர்களை பராமரிக்கும் ´அபிமன்சல´ஆரோக்கிய விடுதி மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்களின் மனைவிகள் மற்றும் தாய்மார்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டிய ஜெனரல் குணரத்ன “அத்தகைய பெண்மணிகளின் சகிப்புத்தன்மை மகத்தானது” என்று கூறினார்.

“யுத்தத்தின் போது இத்தகைய மன அழுத்தம் மற்றும் துன்பங்களை தாம் எதிர் நோக்கியதாகவும் போர் வீரர்களின் அன்புத் தாய்மார்களுக்கும் மனைவிகளுக்கும் ஒட்டுமொத்த தேசத்தினது அன்பும் கௌரவமும் உள்ளதென என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

அத்துடன் ஆணாதிக்க சமுதாயக் கட்டமைப்பிற்குள் கூட இலங்கைப் பெண்ணுக்கு பாரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், பெண் தொழில் வல்லுநர்களுக்கு, நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், வண. பெங்கமுவே நாளக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஸ் நாணயக்கார, முன்னாள் பெண் கல்வியியலாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் , பிரபல வர்த்தக சாதனை பெண்கள், சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிரேஷ்ட கலைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.