நாளாந்த வேதனம் 1000 ரூபா என அறிவித்து வர்த்தமானி வெளியீடு.

தேயிலை மற்றும் இறப்பர் சார் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1000 ரூபா என அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சரின் செயலரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது கடந்த 5 ஆம் திகதி முதல் செல்லுபடியாதல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதன நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த வேதனம் 900 ரூபாவாகவும் பாதீட்டு கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் சேர்த்து நாளாந்த வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.