புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இரு படகுகள் கவிழ்ந்ததில் 39 பேர் பலி.

துனிசிய கடற்பரப்பில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இரு படகுகள் கவிழ்ந்ததில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸ் கடற்பரப்பில் சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலோர காவல்படையினரால் 165 பேர் மீட்கப்பட்டதுடன், ஏனையவர்களை தேடும் பணி இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக துனிசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் ஜெக்ரி தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த அனைத்து குடியேற்றவாசிகளும் சகாரா-கீழமை ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.