புர்காவுக்குத் தடை! அமைச்சரவை பத்திரத்தில் சரத் வீரசேகர கையெழுத்து.

இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ‘புர்கா’ அணிவதைத் தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

களுத்துறை பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, இலங்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத மதரசா பாடசாலைகள் இருக்கின்றன என்றும், அவை முறையாகக் கட்டுப்படுத்தப்படாமையால் எதிர்காலத்தில் அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டில் 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பிள்ளைகளும் தேசிய கல்வித் திட்டத்தின் கீழ் கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.