நிந்தவூர் பிரதேசத்தில் 7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ள நோட்டுக்களுடன் மூவர் கைது.

கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில் புழக்கத்தில் விட தயாரான போலி 5000 ரூபா நாணயத் தாள்கள்.

இதில் 7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ளநோட்டுக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (15) இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலீஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபர்கள் தங்கிய வீட்டில் இருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5000 ரூபா நோட்டு பணம் அச்சிடும் தாள்கள் அச்சிடப்பட்ட பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும், இவ்வாறு கைதான நபர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஒலுவில் பாலமுனை கல்முனை ஆகிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதானவர்களாவர்.

5000 ரூபாய் நாணயத் தாள்கள் பரிமாறும்போது அவதானமாக இருப்போம்.

 

(சதாசிவம் நிரோசன்)

Leave A Reply

Your email address will not be published.