காணி ஆவணங்கள் மீளக்கொண்டு வரப்படுகிறது! அமைச்சர் தேவாவின் முயற்சி நிறைவேறியது!!

வடக்கு மாகாணத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழு (LRC) காணி ஆவணங்களை அனுராதபுர அலுவலகத்திற்கு மாற்றும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி கொண்டு சென்ற LRC காணிகளின் ஆவணங்கள் நாளை மீளக்கொண்டு வர நடவடிக்கை எடக்கப்பட்டுள்ளது.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற யாழ் கிளிநொச்சி மாவட்ட வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மேற்படி விடயம் குறித்து கடந்த வாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாணத்தில் இருந்து காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றம் செய்யப்படாது என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.