பசறையில் 200 அடி பள்ளத்தில் விழுந்தது பஸ்; 15 பேர் மரணம்! 46 பேர் படுகாயம். (CCTV video)

2ம் பதிப்பு…….

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்து இன்று காலை 6.55 மணியளவில் இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை லுணுகலையில் கொழும்புக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள் பசறை வைத்தியசாலைக்கும், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது எனவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம், பதுளை வைத்தியசாலையில் இரத்தத் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும், இரத்த தானங்களை மேற்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

height=”808″ class=”aligncenter size-full wp-image-34063″ />

Leave A Reply

Your email address will not be published.