வடக்கில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருவரும், முல்லைத்தீவில் ஒருவரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 419 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் மூவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனாத் தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட சுண்டுக்குழியைச் சேர்ந்த 37 வயது ஆணொருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையில் கொரோனா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட பெண்ணொருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்புடையவர்.

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் பெண்ணொவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் ஆடைத்தொழிற்சாலை தொற்றாளருடன் தொடர்புடையவர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.