பிரேரணையை சிறந்த முறையில் எதிர்கொள்வோம்! – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முப்பது வருட கால சிவில் போர் இலங்கையின் சுதந்திரத்துக்காகவே முன்னெடுக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் போராளிகள் குறித்து மாத்திரம் கவனம் கொள்ளும் மேற்குலகம் போரில் உயிரிழந்த 29 ஆயிரம் படையினர் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்த்து ஏனைய மாகாணங்களில் விடுதலைப்புலிகளின் தாக்குதலால் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலைக்குரியது.

எந்த நாடுகளையும் பகைத்துக்கொள்ளாமல் ஜெனிவா விவகாரத்தை அரசு சிறந்த முறையில் கையாளும்.

பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விடயங்களை நாட்டின் சுயாதீனத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசமைப்பு உட்பட்ட உள்ளகப் பொறிமுறை ஊடாகச் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.