நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி.

மாவனெல்லை-போவெல்ல பகுதியிலுள்ள மாஓயாவில் நீராட சென்ற 7பேர் கொண்ட குழுவினரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இச் சம்பவம் நேற்று மாலை 3.30மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

24 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரனையை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.