கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 31,133 பேருக்கு கொரோனா உறுதி யாழில் 820 பேருக்குத் தொற்று.

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 31 ஆயிரத்து 133 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இம்மாவட்டத்தில் நேற்று 64 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 77 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் இதுவரை 820 பேர் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.