தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வு மட்டக்களப்பில் மாவை தலைமையில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தின நிகழ்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா பூங்காவில் அமைந்துள்ள சிலைக்கு அருகில், குறித்த நிகழ்வு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் அஞ்சலியும், மௌன வணக்கமும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான பொன். செல்வராஜா, மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், கி.துரைராஜசிங்கம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், கட்சியின் மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.