இரண்டாம் தவணை தொடங்கும் போதே யாழ்.கல்வி வலயப் பாடசாலைகள் திறக்கப்படும்.

இரண்டாம் தவணை தொடங்கும் போதே யாழ்.கல்வி வலயப் பாடசாலைகள் திறக்கப்படுமென கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த யாழ்.கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மீளவும் இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே மீளத் திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் இரு வாரம் செயற்படாது என வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 29ஆம் திகதி தொடக்கம் கடந்த வாரம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் இடைநிறுத்தப்பட்டன.

எனினும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய பாடசாலைகளை முடக்கும் நடவடிக்கை நாளை தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுகிறது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே திறக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.