தானங்கள் எத்தனை தலை முறைக்கு புண்ணியம்!

நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் புண்ணியங்களையா .?
பாவங்களையா..?

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்!
நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்!
ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!

நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்.!

நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்!

நாம் செய்யும் தானங்கள்
எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

பட்டினியால் வருந்தும்
ஏழைகளுக்கு உணவளித்தல் 3 தலைமுறைக்கு.

புண்ணிய நதிகளில் நீராடுதல் 3 தலைமுறைக்கு.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் 5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் 5 தலைமுறைக்கு.

ஏழைப்பெண்ணுக்கு
திருமணம் செய்வித்தல் 5 தலைமுறைக்கு
.
பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது 6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் .7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்கு
அந்திம கிரியை செய்தல் 9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் 21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்!

Leave A Reply

Your email address will not be published.