கொக்கட்டிசோலையில் பெருமளவான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.

கொக்கட்டிசோலை போலீஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு களப்பு பகுதியில் 21 இலட்சத்து 60 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு மற்றும் 15 பரல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை பொலிஸாரிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் கொக்கட்டிசோலை போலீஸ் பொறுப்பதிகாரி எம்.பி.குணரத்ன தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த முற்றுகையின் போது வடி , சாராயம் வடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கோடா மற்றும் 12 பரல்களுடன் ஏனைய பொருட்களும் கைப்பேற்றப்பட்டுள்ளதுடன் எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.