கர்ப்பத்தடை மாத்திரை மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது.

கர்ப்படை மாத்திரை கடை வியாபர நிலையங்கள் உணவகங்களில் பாவிப்பது பற்றி அடங்கியிருந்த சந்தேகத்தை இவர்கள் மீண்டும் தொடங்கியுள்ளார்கள்,

கிண்ணியா ஊடாக மூதூர் சென்ற வேனில் பெருமளவான கர்ப்பத் தடை மாத்திரைகள், மற்றும் கோடிக்கணக்கு பெறுமதியான
ஐஸ் போதைப்பொருள், 2 இளைஞர்கள் கைது!

கொழும்பிலிருந்து கிண்ணியா ஊடாக மூதூருக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்றிலிருந்து ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் (06) கைது செய்யப்பட்டுள்ளனர் என கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். மேற்படி வேனின் சாரதியான கொழும்பு, வெல்லமபிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞரும் மூதூர் ஜாயா வீதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமாக காணப்பட்ட இந்த வேனை கிண்ணியா, கண்டலடியூற்று இராணுவ முகாம் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் வைத்து சோதனையிட்டபோது வானுக்குள் கோழிக் குஞ்சுகள் காணப்பட்ட நிலையில் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கிறனர்.

மேலும் கர்ப்பத் தடை மாத்திரைகள் பெருமளவான கார்ட்டுகளும் வெளிநாட்டு சிகரெட் பக்கெட்டுகள் 5 உம் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வானில் போதைப்பொருட்களுடன் வந்த ஒருவர் கிண்ணியாவில் இறங்கியுள்ளார் எனவும் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.