புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் மக்களின் பாவனைக்காக திறந்து வைப்பு.

அக்கரபத்தனை, கிலாஸ்கோ – ஆக்ரோவா தோட்டத்துக்கு செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள பாலம் மிக நீண்ட காலமாக புனரமைக்கபடாமையினால் இப்பிரதேச மக்கள் இன்னல்களுக்கு முகங்கொடுத்துவந்தனர்.

இம்மக்களின் இப்பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஜனாதிபதியின் ஆயிரம் பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஊடாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைவாக 38.94 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் மக்களின் பாவனைக்காக இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.