நான்கு பொலிஸார் உட்பட மேலும் ஏழு பேருக்கு யாழில் கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 350 பேரின் மாதிரிகள் நேற்றுப் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 7 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள். ஏனைய நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.