பொலிகண்டியில் வெடிபொருட்கள் சிக்கின!

தமிழீழ விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் சில பொலிகண்டிப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

பொலிகண்டி கிழக்கிலுள்ள புதுவளவு என்ற இடத்தில் இந்த வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிபொருட்களைச் செயலிழக்க வைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படவில்லை எனவும், விசேட அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.