42 பேருக்குக் கொரோனா தொற்று: இழுத்து மூடப்பட்டது தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மூன்று தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 42 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பொருளாதார மத்திய நிலைய வளாகத்தில் 190 பேருக்கு எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 42 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் வர்த்தகர்கள், அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனையாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களும் அடங்குகின்றனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.