அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் விழா.

பம்பலப்பிட்டி – அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் விழா, அண்மையில் மிகவும் வெற்றிகரமாக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார். விசேட அதிதிகளாக, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இலங்கைக்கான மாலைதீவுத் தூதுவர் ஒமர் ரஸ்ஸாக், பிரதித் தூதுவர் அஸ்லம் சாகிர், சிறைச்சாலை ஆணையாளர் மலின் லியனகே, முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் மனித உரிமைகள் அமைப்பின் ஆளுநருமான ஏ..ஜே. மொஹமட் பாய்ஸ், முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக பீடாதிபதி எஸ். சந்திரசேகரம் ஆகியோர் உள்ளிட்ட பல உள்நாட்டு, வெளிநாட்டு கல்விமான்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

உலகை மாற்றுவதற்கான முதல் சக்தி, கல்வி அறிவாகும். எவருக்கு நல்ல கல்வி அறிவு ஞானம் இருக்கின்றதோ, அவர்கள் எந்தத் துறையில் பயணித்தாலும் வெற்றி பெறுவது நிச்சயம். இந்த அடிப்படையில், பம்பலப்பிட்டி அமேசன் உயர்கல்வி நிறுவனம் சுமார் பத்து வருடங்களாக, ஏனைய கல்வி நிறுவனங்களை விடவும் மாறுபட்ட முறையில் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அமேசன் உயர் கல்வி நிறுவனம், கல்வியோடு மட்டுமன்றி பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெறும் புத்தகக் கல்வியை மட்டும் மையமாகக் கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே
சுய வேலைத் திட்டங்கள் (Individual Project), பயிற்சிப் பட்டறைகள் (practical workshops), வெளிநாட்டு மாணவர்களின் தொடர்பாடல் (Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடல் மாத்திரமின்றி, மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களைத் தயாரித்து அனுப்புகின்றமையும் விசேட அம்சமாகும்.

எதிர்வரும் ஆண்டுகளில் துரிதமாக, உலகிலேயே அதிகமாகத் தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Green Technology, Solor Technology, Hybrid technology, Cloud Computing, Automated System, Mobile Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெறிகளையும் ஆரம்பிக்கவிருப்பதாக, அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தனது வரவேற்புறையின்போது குறிப்பிட்டார்.

இப் பட்டமளிப்பு விழாவில், 140 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், உளவியலும் உளவளத்துணையும், ஆசிரியர் பயிற்சி நெறி,தகவல் தொழில்நுட்பம், கணக்கியல் போன்ற பல துறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இங்கு உரையாற்றும்போது,

நமது நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிலை காணப்பட்டு வருகிறது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டுக்கு புதிய துறைகளில் கற்றல் துறைகளைச் சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றார்கள்.
இதனை அரசாங்கத்தினால் மட்டும் செய்துவிட முடியாது. இன்று இலங்கையின் பொருளாதாரக் கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்கினை, தனியார் துறையைச் சேர்ந்த துறையினரே வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கது என்றார்.

இவ்விழாவில் பங்கேற்ற அதிதிகள், சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், சிறந்த விரிவுரையாளர்கள் மற்றும் இணை நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு, அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார், விசேட நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.