இலங்கையில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தலில்!

களுத்துறை, கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் இன்றிரவு 8 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவின் பொல்ஹேன, ஹீரெலுகெதர, களுவக்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் அஸ்வென்னவத்தை வடக்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்தோடு, களுத்துறை மாவட்டத்தின் மீகாத்தென்னை பொலிஸ் பிரிவின் மிரிஸ்வத்தை, மற்றும் பெலவத்தை வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, திருகோணமலை பொலிஸ் பிரிவின் பூம்புஹார் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.