பாரிஸில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்ட இலங்கை பெண் ; சந்தேக நபர் கைது

பாரிஸில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டவர் இலங்கை பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு , கொலையில் தொடர்புடையவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d’Oise) பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.முதலில் இவர் இந்திய – பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடும் என்று பொலீஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும் அவர் பாரிஸ் புறநகரான சார்ஸல் (Sarcelles) பகுதியைச் சேர்ந்த 40 வயதான இலங்கைப் பெண் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இலங்கைத் தமிழரா என்பதை உடனடியாக உறுதி செய்யமுடியாத நிலையில் போலீசார் இருந்த நிலையில் , கொலையான பெண் குளியாபிட்டியை சேர்ந்த வனிகசேகர ஆரச்சிலாகே தொண் மிரியமி ரவினி நிலங்கா (40) எனும் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த சிங்களவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை நடந்த நாளில் குறித்த பெண்ணுடன் காணப்பட்டவர் எனக் கூறப்படுகின்ற இலங்கையரான மாத்தறையை சேர்ந்த ரங்க என்பவரை போலீசார் கைது செய்ததை அடுத்தே, பெண்ணின் சடலம் சிலவாரங்களின் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொலையுண்ட பெண் சார்ஸல் பகுதியில் கத்தோலிக்க சமூக நல அமைப்பு ஒன்றினால் நிர்வகிக்கப்படுகின்ற வதி
விடத்தில் வசித்து வந்த காரணத்தால் அவர் காணாமற்போன விடயம் உடனடியாக எவருக்கும் தெரியவரவில்லை என்று கூறப்படுகிறது.

பாரிஸில் உள்ள வசிப்பிடத்தில் நடத்தப்பட்ட தேடுதலை அடுத்தே கொலையுடன் தொடர்புடைய 42 வயதுடைய ரங்க என்ற நபர் கைது
செய்யப்பட்டிருக்கிறார். அவரது தொலைபேசி மூலமாகக் கிடைத்த முக்கிய தகவல்கள் பெண்ணின் கொலையில் தொடர்பு இருப்பதைக் கண்டறிய உதவி உள்ளன.

தடுப்புக் காவலில் வைத்து அவரை விசாரணை செய்த சமயத்தில் அவர் கொலையை ஒப்புக் கொண்டார் என்று கூறப்படுகிறது. பாரிஸ் Versailles குற்றத் தடுப்புப் பிரிவினர் இக் கொலை தொடர்பான விசாரணைகளை நடத்தி வந்தனர்.

– RK

Leave A Reply

Your email address will not be published.