ரெம்டெசிவிர் மருந்தை, கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது.

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை, கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசால் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மருந்தை, சிலர் அதிக விலைக்கு விற்பதாக தகவல் கிடைக்கப்பட்டதையடுத்து போலீசார் நடத்திய ஆய்வில், வில்லிவாக்கத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவர், கள்ளத்தனமாக ரெம்டெசிவிர் மருந்து விற்றது தெரியவந்தது.

2400 ரூபாய் மதிப்பிலான மருந்தை, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதை அடுத்து, அவரை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல், வில்லிவாக்கம் ஐசிஎஃப் அருகே, சட்டவிரோதமாக மருந்து விற்பனையில் ஈடுபட்ட ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.