இலங்கைக்கு ஒரு விமானத்தில் 75 பேர்தான் பயணிக்க முடியும்!

கொரோனா வைரஸ் தொற்றுடன் வெளிநாட்டவர்கள்
வருவதால் பயணிகள் எண்ணிக்கை மட்டுப்படுத்தல்

இலங்கைக்கு ஒரு விமானத்தில் பயணிக்க முடியுமான பயணிகள் தொகையை மட்டுப்படுத்துவதற்கு சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

நாட்டில் கொரோனாப் பரவல் தீவிரமடைந்துள்ளதோடு, வெளிநாட்டுப் பயணிகள் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்படும் வீதம் அதிகரித்ததைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாளை திங்கட்கிழமை அதிகாலை 4 மணியின் பின்னர் இலங்கைக்கு வரும் விமானங்களில் அதிகூடியதாக 75 பயணிகள் மட்டுமே வர முடியும் என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்றும், கொரோனா எச்சரிக்கையைக் கருத்திற்கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விமானத்தில் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் உள்ளடங்களாக 75 பேர் மட்டுமே இலங்கைக்குக் பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாட்டுடன் விமான சேவைகளை இயக்கத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.