வடக்கில் மேலும் 7 பேருக்குக் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 478 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 7 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 2 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

பூவரசம்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளிக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.