இலங்கைக்குள் பிரவேசிக்க இந்தியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் பரவி வரும் கோவிட் -19 அலைகளை அடுத்து, இந்தியாவின் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இந்திய பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க புதிய சுற்றுலா விசாக்களை வழங்குவதை நிறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை ஏப்ரல் 29 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் 29 முன்னர் வழங்கப்பட்ட வீசா உள்ளோரை நாட்டுக்குள் அனுமதிப்பதையும் தடை செய்யும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.