கொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி கொடுக்கப்பட வேண்டும்

கோவிட் 19 தொற்றுநோய் பரவியதால் வீட்டில் தங்க வேண்டியவர்களுக்கு அவர்களது சம்பளத்தில் பாதியை செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலைக்கு திரும்புவோருக்கு வழக்கம் போல் முழு சம்பளத்தையும் செலுத்த வேண்டும் என்றும் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நேற்று (04) அமைச்சக வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

தொழிலாளர் துறை, முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றோடு நடந்த தேசிய அளவிலான கலந்துரையாடல்களுக்குப் பிறகு இந்த முடிவுகளை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டுமானால், அவர்கள் சேவை நிறுத்துதல் சட்டத்தின் கீழ் இழப்பீடு கோர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கோவிட் 19 தொற்றுநோய் பரவியதால் நாட்டில் சுமார் 15,000 பேர் வேலை இழந்துவிட்டதாக தொழில் துறை அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.