நம்பிக்கை கொள்ளும் மக்கள் கூட்டம் இருக்கிற வரையில் எந்த சூழ்ச்சியும் நம்மையும் வீழ்த்த முடியாது.

நம்பிக்கை கொள்ளும் மக்கள் கூட்டம் இருக்கிற வரையில் எந்த சூழ்ச்சியும் நம்மையும், மக்கள் நீதி மய்யத்தையும் வீழ்த்த முடியாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

மும்முனை போட்டியிருந்த கோவை தெற்கு தொகுதியில் 33 சதவிகிதம் வாக்காளர் தம்மை மதித்து வாக்களித்துள்ளார்கள் என்றும், பணம் கொடுத்து வாக்குகள் வாங்காத மக்கள் நீதி மய்யம் 33 விழுக்காடு பெற்றுள்ளதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் இன்னும் இரண்டாயிரம் வாக்குகள் வாங்கியிருந்தால் சரித்திரம் சற்றே மாறியிருக்கும் எனவும், சாதனை என்பது சொல் அல்ல செயல் எனவும் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவர்கள் என காத்திருப்பவன் நானல்ல என்றும், தவறிழைத்தவர்களை திருத்தும் கடமையும், உரிமையும் உள்ள தலைவன் நான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.