நிறைவேறியது ‘போர்ட் சிட்டி’ சட்டமூலம்!

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இன்று நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

குறித்த சட்டமூலம் தொடர்பான வாத விவாதங்கள் நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி / ஜாதிகா ஜன பலவேகய மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

மசோதா அல்லது குழுவின் மூன்றாவது வாசிப்பின் போது எதிர்க்கட்சியால் பல திருத்தங்கள் செய்ய வேண்டுமெனும் கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், அவை எதுவுமே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.