‘போர்ட் சிட்டி’ சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் (photos)

கொழும்புத் துறைமுக நகர விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற நுழைவாயிலில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“தேசத் துரோக கொழும்புத் துறைமுக நகர விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை அரசு கைவிட வேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.