போதைப்பொருள் வர்த்தகர் மட்டக்குளியில் சிக்கினார்!

கொழும்பு 15, மட்டக்குளிப் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் நீண்டகாலமாக வத்தளை, மட்டக்குளி, முகத்துவாரம் மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.