சிறையிலிருந்து மீண்டும் வெளியில் வந்த பேரறிவாளன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இன்று (28) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி ,மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், குறித்த கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியிருந்தார். இதற்கமைய இன்று அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் , புழல் சிறையில் இருந்து வேலூர் மத்தியச் சிறைக்கு அழைத்து செல்லப்படும் பேரறிவாளன் அங்கிருந்து அவரது இல்லத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.