மொரட்டுவை நகரசபை தவிசாளர் கைது.

மொரட்டுவை நகரசபை தவிசாளர் சமன் லால் பெர்னாண்டோ, கல்கிசை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

மொரட்டுவ பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமொன்றின்போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் அவர் கல்கிசை காவல்நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.