யாழ்ப்பாண மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று 29.05.2021 இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, பிரதமரின் வடக்கு கிழக்கு இணைப்பாளர், ஆளுநரின் செயலாளர் ,வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மற்றும் சுகாதார துறைசார் அதிகாரிகள்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.