தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் அற்புதங்கள் தாங்கிய ஆலய வரலாற்று நூல் வெளியீடு.

நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் அற்புதங்கள் தாங்கிய ஆலய வரலாற்று நூல் வெளியீடு.


நயினாதீவின் தென்மேற்கிலே அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழாவை முன்னிட்டு அம்பாளின் அமைவிடம், ஆலய உருவாக்கம், நிர்வாக முறைமை, திருவிழாக்கள், சமூக சமய அமைப்புகள், மெய்யடியார் திருப்பணிகள், அம்பாளின் அற்புதங்கள் எனும் பல விடயங்களை தாங்கி நூலாசிரியர் ஆ.சி.ப. அமுதவாசன் (கவியூரான் அன்சவா) எழுத்துருவில் “நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய வரலாறு “எனும் நூல் 29.05.2021அன்று சிறப்பாக வெளியீடு செய்யப்பட்டது.

ஆலய நிர்வாகி ஆ.சி.ந.கதிரவேற்பிள்ளையும் ஆலய குருமணி குகன் சர்மாவும் வெளியிட்டுவைக்க ஆலய மெய்காவலர். திரு. இ.தீபன்(கரன்) மற்றும் திரு.இ.செந்தில் பெற்றுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.