கொரணா வார்டுக்கு உள்ளே சென்று நலம் விசாரித்த தமிழக முதல்வர்.

கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும்.

தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!

கொவிட்19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!

Leave A Reply

Your email address will not be published.