ஒரே நாளில் 50 இற்கும் அதிகமான உயிரிழப்புகள்: மொத்தக் கொரோனா காவு 1,844

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரச தகவல் திணைக்களம் இன்றிரவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ஒரே நாளில் வெளியிடப்பட்ட அதிக மரணங்களின் எண்ணிக்கையாக இன்றைய அறிவிப்பு அமைந்துள்ளது.

மே 10ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 15 கொரோனா சாவுகள் பதிவாகியுள்ளன.

அத்துடன், ஜூன் 2ஆம் திகதி முதல் ஜூன் 7ஆம் திகதி வரை 39 கொரோனா சாவுகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 பெண்களும், 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,844 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.