பருத்தித்துறைப் பொலிஸார் நால்வருக்குக் கொரோனா!

யாழ். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனையில் இருவருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

அதையடுத்து இன்று (14) பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் அருகில் வர்த்தக நிலையம் நடத்துபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும், பொலிஸ் நிலையத்துக்கு அருகில் தேநீர் சாலை ஒன்றை நடத்தி வருபவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பி.சி.ஆர். பரிசோதனைக்காக அவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.