மகாவிஷ்ணு வின் 16 நாமங்கள்.

மருந்தை உட்கொள்ளும் பொழுது அவனை அழைத்தால் – விஷ்ணு

உணவை உட்கொள்ளும் பொழுது அவனை நினைத்தால் – ஜானர்த்தனன்

படுக்கச் செல்லும் பொழுது அவனை நினைத்தால் – பத்மநாபன்.

திருமணத்தின் பொழுது அவனை நினைத்தால் – பிரஜாபதி.

யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் – சத்ரதாரி.

வெளியில் கிளம்பும் பொழுது அவனை நினைத்தால் – திரிவிக்ரமன்.

நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது – ஸ்ரீ தரன்.

கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் – கோவிந்தன்.

கஷ்டம் வரும் போது , அவனை அழைத்தால் – மதுசூதனன்.

காடுகளில் செல்லும் பொழுது நரசிம்மனாக தம்மை அண்டியவர்களைக் காப்பவன்,

நெருப்பால் துன்பம் வரும் பொழுது, அவனை நினைத்தால் அவனே – ஸ்ரீ மகாவிஷ்ணு,

தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் அவனே – ஸ்ரீ வராகன்,

ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவன் நாமத்தை நினைக்கும் பொழுது அவனே – ஸ்ரீ ராமன்,

நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் அவனே – வாமனன்,

இறக்கும் தருவாயில் அவன் நமக்கு – நாராயணன்,

எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் – மாதவன்.

Leave A Reply

Your email address will not be published.