இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, தடை நீடிப்பு.

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, பிலிப்பைன் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ,இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு தொடர்ந்தும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஆரம்பத்தில் ஏப்ரல் 29 முதல் இந்தியா மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.பின்னர் இலங்கை உட்பட பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த மே 7 ஆம் திகதி முதல் பயணத் தடை விதிக்கப்பட்டது.

மேலும் ,இந்நிலையில் கொரோனா தொற்று அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு, பிலிப்பைன் ஜனாதிபதியி ரோட்ரிகோ டூர்ட்டேயினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.