சாவக்காடு கிராமம் தனிமைப் படுத்தப்பட உள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட
J/ 131 சாவக்காடு கிராமம் தனிமைப் படுத்தப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

சாவற்காடு கிராமத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி சிஆர் பரிசோதனைகளின் போது அதிகளவானோர் தொற்றுக்குள்ளானதன் காரணமாக குறித்த பகுதியினை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவினர் சிபார்சு செய்துள்ளதாகவும் இன்று மாலை முதல் குறித்த பகுதி தனிமைப் படுத்தப்படவுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.