கோவிட் தொற்றால் 59 பேர் உயிரிழப்பு.

நாட்டில் நேற்று முன்தினம் கோவிட் தொற்றால் 59 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,374 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 28 பெண்களும், 31 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். நாளாந்த கோவிட் மரணங்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்று கையாளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 14ஆம் திகதி முதல் நாளாந்தம் கோவிட் காரணமாக மரணிக்கின்றவர்களின் விபரங்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 2419 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 230,675 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,667 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 194,145 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.