யாழில் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில்! – இரண்டு கிராமங்கள் முடக்கம் மாவட்ட அரச அதிபர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 721 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். மாவட்டத்தில் இதுவரை 73 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 919 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். அதில் 3 ஆயிரத்து 696 பேர் சிகிச்சை பெற்று நலமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 721 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 71 நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.

நாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்குத் தற்போது வழங்கட்டு வரும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு யாழ். மாவட்டத்தில் இதுவரை 71 ஆயிரத்து 721 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.