கூட்டமைப்பினருடன் விரைவில் பேச்சு! – சம்பந்தனுக்கு கோட்டா கடிதம்.

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளேன். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கின்றேன்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று (23) அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வெகு விரைவில் சந்திப்புக்கான திகதியை அறிவிப்பதாகவும் அந்தக் கடிதத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பில் விடயங்கள் இடம்பெறும்போது, தமது கட்சி அது குறித்து முடிவெடுக்கும் எனவும் இரா.சம்பந்தன் மேலும் கூறினார்.

அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று (23) நாடாளுமன்றத்துக்கு வருகை தராமையால், உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை நடத்த முடியாமல் போனது.

Leave A Reply

Your email address will not be published.